11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்... 62வயது தாத்தா ( தாயின் தந்தை ) கைது... குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்.
கம்பஹா மாவட்டத்தில் வசித்து வரும் 11 வயது
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாத்தா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஷேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி அவரது தாய், தந்தை மற்றும் 5 வயது தங்கையுடன் வாழ்ந்து வந்திருந்துடன் பெற்றோர் வேலைக்கும் செல்லும் சந்தர்ப்பத்தில் சிறுமி பாட்டி அவர்களது வீட்டிற்கு பாதுகாப்பிற்காக வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி சிறுமியின் பெரியம்மாவிற்கு சுகயீனம் ஏற்பட்ட காரணத்தினால் பாட்டி வௌியில் சென்ற சந்தர்ப்பத்தில் தாத்தாவை பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுமி தனது தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதி இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் சிறுமியின் தாய் அவரது தந்தையிடம் இது தொடர்பில் விசாரித்த சந்தர்ப்பத்தில் அவர் தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து 62 வயதுடைய குறித்த சிறுமியின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
Siva Ramasamy
11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்... 62வயது தாத்தா ( தாயின் தந்தை ) கைது... குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்.
Reviewed by Madawala News
on
July 31, 2021
Rating: