களுத்துறை வஸ்கடுவே கொரோனா வைரஸ் சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து, நாராஹேன்பிடியில்
உள்ள தனியார் வைத்தியசாலைக்குப் பி.சி.ஆர் பரிசோதனை மாதிரிகளை எடுத்துச் சென்ற அம்புயூலன்ஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், சாரதி காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார், விபத்துக்குள்ளான அம்புயூலன்ஸ் 50 மீற்றர்களுக்கு புரண்டுச் சென்றதாகவும் விபத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்குள்ளாகி காயமடைந்த அம்புயூலன்ஸின் சாரதி கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிலைமைக் கவலைக்கிடமையாக .இருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளாகி கடுமையாக சேதமடைந்த அம்புயூலன்ஸ் வண்டி.
Reviewed by Madawala News
on
June 10, 2021
Rating: