பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையம் ஊடாக மது விநியோகம் தொடங்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கும்.
பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையம் ஊடாக மது விநியோகம் தொடங்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற ஒரு திட்டத்திற்கான தயாரிப்பு சதித்திட்டமாக இருக்கலாம் என, சந்தேகம் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுநோயால் பல அத்தியாவசிய செயல்பாடுகள் சீர்குலைந்திருக்கும் நேரத்தில் மது விநியோகத்துக்கு ஒரு பொறிமுறையை அமைப்பது கேள்விக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையம் ஊடாக மது விநியோகம் தொடங்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கும்.
Reviewed by Madawala News
on
June 16, 2021
Rating: