முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால்
சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்யும் நீதிபதிகள் குழாமில் இருந்து மேலும் ஒரு நீதிபதி இன்று (23) விலகியுள்ளார்.
தம்மை கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருந்தல் சட்ட விரோதமானது என தீர்ப்பினை வழங்குமாறு கோரி அவர்களால் குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மனுக்கள் இன்று பிரீதி பத்மன் சூரசேன, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, தனிப்பட்ட காரணத்தினால் தான் குறித்த மனுக்கள் பரிசீலனையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் குழாம் உறுப்பினரான ஏ.எச்.எம்.டி. நவாஸ் அறிவித்துள்ளார்.
பதியுதீனின் மனு பரிசீலனையில் இருந்து மேலும் ஒரு நீதிபதி (ஏ.எச்.எம்.டி. நவாஸ்) விலகல்.
Reviewed by Madawala News
on
June 23, 2021
Rating: