அதிர்ஷடம் இருந்தால் 2022 இல் நாமல் ராஜபக்‌ஷ நாட்டின் பிரதமர்.



 2022 இல் நாட்டின் பிரதமராகும் அதிர்ஷடம் இருந்தால், அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு அப்பதவி கிடைக்குமென

தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சிலருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது, தூரதிஷ்டத்தால் இன்னும் சிலர், அரசியலிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றார்.


பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கொரோனா தொற்று ஏற்படுமென யாருமே நினைக்கவில்லை: அதேபோல, எதிர்பாராத நிலைமைகள் கூட ஏற்படலாம் என்றார்.


நாமல் ராஜபக்‌ஷ, இரண்டாவது தடவையாகவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டவர் என்பதுடன், சட்டத்தரணியாகவும் சிறந்த கல்வித் தகைமைகளும் உள்ளதால் அவருக்கு எந்த சந்தர்ப்பத்தில் அதிர்ஷ்டம் கிட்டுமென கூறமுடியாது என்றார்.

அதிர்ஷடம் இருந்தால் 2022 இல் நாமல் ராஜபக்‌ஷ நாட்டின் பிரதமர். அதிர்ஷடம் இருந்தால் 2022 இல் நாமல் ராஜபக்‌ஷ நாட்டின் பிரதமர். Reviewed by Madawala News on June 10, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.