சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபருக்கு உடந்தையாகச் செயற்பட்ட சக பொலிஸ் உத்தியோகத்தர்களை தம்புள்ளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போஹோரன்வேவா பகுதியிலுள்ள வீதியொன்றின் ஊடாக குறித்த பத்து வயதான சிறுமி தினமும் பிரத்தியக வகுப்புகளுக்கு சென்று வந்த நிலையில், நபர் ஒருவர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை தம்புள்ளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, உதவிப் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜென்ட், காண்ஸ்டபிள் ஒருவரை நேற்று (06) தம்புள்ளை பொலிஸார் கைது செய்தனர்.
இதன்போது நடந்த விசாரணையில் பொலிஸ் சார்ஜென்ட் தனது முச்சக்கர வண்டியை குறித்த சந்தேக நபருக்கு வழங்கியமை தெரியவந்தது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Siva Ramasamy
Thamilan
சிறுமி பாலியல் துஷ்பிரயோக விவகாரம்... உதவி செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது.
Reviewed by Madawala News
on
April 07, 2021
Rating: