சாரா புலஸ்தினி உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து, இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.



2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத்

தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளாக, நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.


மேற்படி தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 32 சந்தேகநபர்களுள், இவர்கள் இருவரும் அடங்குவதாகவும் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, மேலும் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், இந்தத் தற்கொலைத் தாக்குதலை வழிநடத்திய சஹ்ரான் ஹாஸிம், 2016ஆம் ஆண்டே பிரிவினைவாதம், வஹாப்வதம் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் நௌபர் மௌலவி என்பவர், 2014ஆம் ஆண்டு ஈராக்கில் இருந்து வந்து, இது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.


அத்துடன், சஹ்ரான் உள்ளிட்டவர்களுக்கு, வஹாப்வாதம், இஸ்லாமிய தீவிரவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்டவைகள் குறித்து, நௌபர் மௌலவியே பயிற்சியளித்துள்ளார் என்பதும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றார்.


இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 217 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 75 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்த அமைச்சர் வீரசேகர, தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள், நேற்று முன்தினமும் (05) கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.


வெளிநாடுகளில் இருந்தவாறு இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்படும் 54 பேரில் 50 பேர், நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.


மற்றுமொரு சந்தேகநபரான சஹாரா எனப்படும் புலஸ்தினி என்பவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து, இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் அவ்வாறு உயிருடன் இருந்தால், சிவப்பு எச்சரிக்கை விடுத்து இன்டபோல் பொலிஸின் உதவியுடன் அவரைக் கைதுசெய்வோம் என்றும் தெரிவித்த அமைச்சர், இந்த விசாரணை அறிக்கையில் மறைப்பதற்கு எதுவும் அரசாங்கத்துக்கு இல்லையெனவும் கூறினார்.


மகேஸ்வரி விஜயனந்தன்

tm

சாரா புலஸ்தினி உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து, இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சாரா  புலஸ்தினி  உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து, இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.