பேக்கரி மற்றும் சிற்றுண்டி தொழிற்சாலைகளுக்கு தேவையான பாம் எண்ணெயை இறக்குமதி
செய்வதற்காக அவர்களுக்கு விஷேட அனுமதி பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.பாம் எண்ணெய் இறக்குமதி மற்றும் செம்பனை செய்கையை தற்காலிகமாக கைவிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதன்காரணமாக தங்களது தொழிற்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக மற்றும் சிற்றுண்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், இது குறித்து நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன விஷேட நடைமுறையின் கீழ் அவர்களுக்கு பாம் எண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என குறிப்பிட்டார்
பேக்கரி மற்றும் சிற்றுண்டி உற்பத்தியாளர்களுக்கு பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்ய விசேட அனுமதி.....
Reviewed by Madawala News
on
April 07, 2021
Rating: