நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது
செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்ற போது, அது சட்டத்திற்கு முரணான செயற்பாடு என தெரிவித்து அவரை சிறைசெல்லவிடாமக் பாதுகாத்தவர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி விஜேதாச ராஜபக்ஷ ! மன்னிக்கவும். இல்லை அவர் தான் நாட்டின் அடுத்த ஜனாதிபதி அவருக்கு நான் பூரண ஆதரவை வழங்குவேன்.
செய்யும் தொழில் பற்றி அறியாவிட்டால் மறைந்த ராஜபக்ஷாக்களின் கௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தாமல், தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வலியுறுத்துவதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.
விஜேதாச ராஜபக்ஷ நாட்டின் அடுத்த ஜனாதிபதி ! அவருக்கு நான் எனது பூரண ஆதரவை வழங்குவேன் ..
Reviewed by Madawala News
on
April 17, 2021
Rating: