கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த கொஸ்கொட தாரக்க உட்பட நால்வருக்கு டெங்கு .

 


தடுப்பு காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் அங்கத்தவரான கீர்த்தி தாரக்க பெரேரா விஜேசேகர எனப்படும் கொஸ்கொட தாரக்க உட்பட நால்வர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.


இதன் காரணமாக அவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.


அத்துடன் குறித்த சந்தேக நபர்களுக்கு விசேட காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொஸ்கொட தாரக்க உட்பட  சந்தேக நபர்களுக்கு இதற்கு முன் கொரோனா தொற்றுறுதியாகியிருந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த கொஸ்கொட தாரக்க உட்பட நால்வருக்கு டெங்கு .  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த  கொஸ்கொட தாரக்க உட்பட நால்வருக்கு டெங்கு . Reviewed by Madawala News on April 06, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.