நேற்றைய தினம் மிகலேவ போலீஸ் பிரிவில், ரெஸ்வெஹர ரஜமகா விகாரைக்கு பௌத்த பிக்கு போல் உடையணிந்து ஒருவர் வருகை தந்துள்ளார்.
இவர் தொடர்பில் சந்தேகம் கொண்ட விகாராதிபதி தேரர் இவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
இதனால் குறிப்பிட்ட நபர் அங்கிருந்து தப்பி பக்கத்திலுள்ள கஹல்ல வன பிரதேசத்திற்குள் ஓடி ஒளிந்து உள்ளார்.
இதனையடுத்து குறிப்பிட்ட நபரை தேடி பிரதேசவாசிகள் மற்றும் காவல்துறையினர் அங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட நபர் குற்றச் செயல் ஒன்றுக்காக இவ்வாறு வந்துள்ளார் என சந்தேகம் இருப்பதால் இவர் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு பொதுமக்கள் வேண்டிக்கொள்ள படுகின்றீர்கள்
பெளத்த பிக்கு போல் நடித்து, தப்பியாடியவரை தேடி விசாரணை.
Reviewed by Madawala News
on
April 17, 2021
Rating: