ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் நேர்முகத்தேர்வு.
ஹஸ்பர் ஏ ஹலீம்_
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ்
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக நியமனம் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு இடம் பெற்றது.
குறித்த நேர் முகத் தேர்வானது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் நேற்று (25) பிரதேச செயலகத்தில் வைத்து இடம் பெற்றது.
இதன் போது ஆவணங்களை பரிசீலனை செய்து நேர்முக குழுவில் உள்ளவர்கள் ஆராய்ந்தார்கள்.
குறித்த நேர்முகத்தேர்வில் பல இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டார்கள்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் நேர்முகத்தேர்வு.
Reviewed by Madawala News
on
February 26, 2021
Rating: