சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, கேகாலை தம்மிக்க நாட்டு வைத்தியரால் தயாரிக்கப்பட்ட பாணி இன்று
இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.கேகாலை – நெலும்தெனிய உடுகும்புற பகுதியிலுள்ள அவரின் வீட்டுக்கு அருகில் பாணி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இன்று (21) காலை 9.30 மணி தொடக்கம் ஒன்றரை மணித்தியாலங்கள் பாணி பகிர்ந்தளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அடையாளம் இடப்பட்டிருந்த இடத்திலிருந்து மக்கள் பாணியை பெற்றுக் கொண்டனர்.
இதன்போது பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டது.
கடந்த நாட்களில் பணத்திற்கே இந்த பானியை வழங்கிய போதும், இன்று இலவசமாக பாணி விநியோகிக்கப்பட்டதாக தம்மிக்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.
கேகாலை தம்மிக்க வைத்தியரால் கொரோனா பாணி இன்று இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
Reviewed by Madawala News
on
January 21, 2021
Rating: