நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை
என தொிவிக்கப்படுகின்றது.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பாிசோதனைகளையடுத்தே இது உறுதிப்படுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொவிட்-19 தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவரோடு நெருங்கிய தொடர்புடையவரென அடையாளம் காணப்பட்டதையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு பி.சீ.ஆர். பாிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்ட தலதா அத்துகோறள மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணிய சிலாின் பி.சீ.ஆர். பாிசோதனை முடிவுகள்.
Reviewed by Madawala News
on
January 11, 2021
Rating: