அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை குறைவடைகிறது.


நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும்

சில தினங்களுக்கு குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் .


சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். 


          கடல் பிராந்தியங்களில். 


களுத்துறை தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் .


கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30-40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


இக் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 km இலும் அதிகரித்துக் காணப்படும் . இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்களில் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 


தேசமானிய 

மொஹமட் சாலிஹீன் 

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 

அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை குறைவடைகிறது.  அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை குறைவடைகிறது. Reviewed by Madawala News on January 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.