சட்டவிரோதமாக நாட்டுக் கொண்டுவரப்பட்ட 55 மில்லியன்
ரூபா பெறுமதியான 12 வாகனங்கள் சுங்க அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி சிங்கப்பூரிலிருந்து மூன்று கொள்கலன்களினூடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரியொருவரின் பெயரை போலியாக பயன்படுத்தி இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான சுங்கப்பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Siva Ramasamy
சட்டவிரோதமாக நாட்டுக் கொண்டுவரப்பட்ட 5.5 கோடி பெறுமதியான 12 வாகனங்கள் கைப்பற்றல்.
Reviewed by Madawala News
on
January 12, 2021
Rating: