கிரான்பாஸ் பகுதியில் வைத்து ஒரு தொகை பணத்துடன்
இருவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து 12 மில்லியன் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் சிறையில் உள்ள பாதாள உலக குழு உறுப்பினரான மொஹமட் சித்தீக் என்பவரின் உதவியாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட பணம் போதைப் பொருள் வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் 40 பவுன் தங்கமும் இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொஹமட் சித்தீக்கின் உதவியாளர் உட்பட இருவர் 12 மில்லியன் பணத்துடன் கொழும்பில் கைது.
Reviewed by Madawala News
on
January 13, 2021
Rating: