இஷாக் ரஹுமான்,அலி சப்ரி ரஹீம்,முஷர்ரப் ஆகியோர் வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.



இஷாக் ரஹுமான் , அலி சப்ரி ரஹீம் , முஷர்ரப் ஆகியோர் 2021  

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அதற்கு   ஆதரவாக இன்று வாக்களித்தனர்.


இவர்கள் மூவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாவர்.


2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 

பிரதமரால் வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று வரையில் 4 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. 

அதன்படி, இன்று சற்று முன்னர் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. 

அதனடிப்படையில் வரவு செலவு திட்ட ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது. 

மேலும், வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஷாக் ரஹுமான்,அலி சப்ரி ரஹீம்,முஷர்ரப் ஆகியோர் வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர். இஷாக் ரஹுமான்,அலி சப்ரி ரஹீம்,முஷர்ரப் ஆகியோர் வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர். Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.