மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர், ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர ஏனைய பிரதேசங்களில், பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கல்வியமைச்சின் குறித்த தீர்மானம் தொடர்பில், கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்த போதே, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர், ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டார்.
சுகாதாரப் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டும்
Reviewed by Madawala News
on
November 20, 2020
Rating: