பாராளுமன்றில் சூடு பிடித்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம்.



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் விவகாரத்தில் தமிழ்த்
 தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஆளும் தரப்புக்கும் இடையில் நேற்று (20) சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

தமிழர் பிரதேச செயலகத்துக்கு காணி, நிதி அதிகாரம் வேண்டும் என கூட்டமைப்பினர் வலியுறுத்த, 70 சத வீத முஸ்லிம்களை கருத்தில் கொள்ள வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் தெரிவித்தனர்.

இந்த விடயத்தில் எல்லை நிர்ணய குழுவின் மூலமாக விரைவில் தீர்வை பெற்றுத் தருவதாக அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ வாக்குறுதியளித்து சர்ச்சையை கட்டுப்படுத்தினார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று கொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் சார்ள்ஸ் எம்.பி கூறுகையில்,

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகம் முழுமையான தனிப் பிரதேச சபையாக தரமுயர்த்தப்படவில்லை. இந்த பிரதேச செயலகத்தில் ஒரு நிருவாக செயலாளரும், 29 கிராம அலுவலர்கள் பிரிவுகளும், 215 அரச பணியாளர்களும் கடமையாற்றி வருகின்றனர்.

எனினும் நிதி அதிகாரமும், காணி அதிகாரமும் இன்றுவரை வழங்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தினால் உறுதிமொழி வழங்கப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசாங்கமேனும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும். ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அங்கு சென்று தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினர். தனியான பிரதேச சபை உருவாக்கிக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசாங்கத்திடம் உள்ளது. இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிள்ளையான் எம்.பியும் தமிழ் மக்களிடம் வாக்குறுதி கொடுத்து இறுதியாக வாக்குகளை சிதறடிக்கும் வேலையையே செய்தார். எனவே அரசங்கம் இந்த விடயத்தில் நேர்மையான பதிலை முன்வைக்க வேண்டும்,


கூட்டமைப்பின் எம்.பியான கலையரசன் தெரிவிக்கையில்,
கிழக்கில் சகல பிரதேச செயலகங்களும் அதிகாரத்துடன் இயங்கும் நிலையில் கல்முனை வடக்கு தமிழர் பிரதேச செயலகம் இன்றுவரை தரமுயர்தப்படவில்லை. தமிழர்கள் இங்கு பாரிய இன்னல்களை சந்திக்க நேர்ந்துள்ளது. ஏனைய சமூகம் சார்ந்த அரசியல்வாதிகளின் தலையீடுகளே இந்தப் பிரதேச செயலகம் தரமுயர்தப்படாததற்கு காரணமாகும்.

ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடக்கி ஆழ நினைக்கும் செயலாகவே நாம் இதனை காண்கிறோம். எனவே அரசாங்கம் உடனடியாக இதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி கூறுகையில்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விடயத்தில் உண்மையில் யதார்த்தபூர்வமான பரஸ்பர பிரச்சினைகள் இருப்பதை நாம் அடையாளம் காண வேண்டும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தரமுயர்த்தும் விவகாரத்தில் அரசியல் வாதிகளின் தலையீட்டின் காரணமாக இது தடைப்பட்டுள்ளது என்று கூறுவதை விடவும் இதில் உள்ள எல்லை பிரச்சினைக்கான சரியான தீர்வை காண்பதற்கான முயற்சியில் பல வருடங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இரண்டு தமிழ் பேசும் சமூகங்களும் ஒற்றுமையாக இந்தப் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வந்துள்ளோம்.

இதற்கான எல்லை நிர்ணயக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விடயத்தில் 29 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகமும், இன்னுமொரு 29 கிராமசேவகர் பிரிவுகளை கொண்ட முஸ்லிம்களுக்கான கல்முனை செயலகத்துக்கும் இடையில் உள்ள நிலங்களை பொறுத்தவரையில் 70 சதவீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு வெறுமனே 29 கிராமசேவகர் பிரிவுகளை இருக்கின்றமையும் அதேநேரம் எல்லை பிரச்சினைகள் குறித்த சிக்கல்களையும் நாம் தீவிரமாக ஆராய்ந்து சுமூகமான முடிவை காணவேண்டும்.

இரண்டு தமிழ்ப் பேசும் சமூகங்கள் இடையில் இதனை விடவும் பரந்துபட்ட உடன்பாடுகள் காணப்பட வேண்டும் என்பதுவும் கருத்தில் கொள்ள வேண்டும். கிழக்கில் பல இடங்களில் இந்தச் சிக்கல் நிலைமைகள் உள்ளன. எனவே, வடக்கு கிழக்கில் மாத்திரம் அரசாங்கம் இந்த கொள்கைகளை கொண்டுவருகின்றதா என்பதையும் கவனிக்க வேண்டும். எவ்வாறு இருப்பினும் இரு தமிழ் பேசும் சமூகங்களும் இந்த விடயத்தை சுமூகமாக தீர்வுக்கான முயற்சிப்போம் என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாணக்கியன் எம்.பி

தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் இந்த விடயத்தில் சில விட்டுக் கொடுப்புகளை செய்தாக வேண்டும், இந்த விடயத்திலும் முஸ்லிம் தலைமைகள் தடையாக இல்லாது விட்டுக்கொடுத்து செயற்பட வேண்டும். பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இந்தப் பிரிவ
பாராளுமன்றில் சூடு பிடித்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம். பாராளுமன்றில் சூடு பிடித்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம். Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.