அமெரிக்காவில் நிரந்தர வதிவிடவுரிமை (கிறீன் கார்ட்) பெறுவதற்கான , லொத்தர் குலுக்கலுக்கு விண்ணப்பங்கள் ஏற்பு ஆரம்பம்.
அமெரிக்க அரசு வருடாந்தம் பல நாடுகளை சேர்ந்த 50,000 பேரை குலுக்கல் முறையில்
தெரிவுசெய்து நிரந்தர வதிவிட உரிமை வழங்கி வருகிறது.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இதற்காக வருடாந்தம் லொத்தர் குலுக்கல் நடைபெறுகிறது.
இக்குலுக்கல் திட்டத்துக்கு விண்ணபிப்பதற்கு இலங்கையர்களும் தகுதியுடையவர்கள் ஆவர், dvprogram.state.gov எனும் இணையத்தளத்தின் மூலம் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
2022 ஆம் ஆண்டில் அமெரிக்க கிறீன் கார்ட் பெறுவதற்கான DV-2022 திட்டத்துக்கு ஒக்டோபர் 7 முதல் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி (இலங்கை நேரப்படி நவம்பர் 10 இரவு 10,30 வரை) விண்ணப்பிக்கலாம் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர வதிவிடவுரிமை (கிறீன் கார்ட்) பெறுவதற்கான , லொத்தர் குலுக்கலுக்கு விண்ணப்பங்கள் ஏற்பு ஆரம்பம்.
Reviewed by Madawala News
on
October 15, 2020
Rating: