பஸ்களில் இளம் பெண்களுடன் நெருங்கி பழகி தங்க நகைகளை அபகரித்து வந்த நபர் மாத்தளை பொலிஸாரால் கைது.


 சொகுசு பஸ் வண்டிகளில் தனியாக பயணிக்கும் பெண்களுடன் நெருங்கி பழகி தங்க நகைகளை அபகரித்த நபரொருவரை கலேவெல பிரதேசத்தில் வைத்து நேற்றுமுன்தினம் மாத்தளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


சந்தேகநபர் இளம்பெண்களுடன் நெருங்கி பழகி வேலைவாங்கி தருவதாக, திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளை கூறி தனியான இடமொன்றுக்கு அழைத்துசென்று மயக்கமருந்து கலந்த குடிபானத்தை கொடுத்து தங்கநகைகளை அபகரித்துள்ளார்.


சந்தேகநபரிடமிருந்து 171 பவுன் தங்க நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


சந்தேகநபர் எப்பாவல பிரதேசத்தைசேர்ந்தவர். இவர் மாத்தளை, சீகிரியா, தம்புள்ள, ஹிங்குராங்கொட பகுதிகளில் சொகுசு பஸ் வண்டிகளில் செல்லும் பெண்களை ஏமாற்றி சுமார் எட்டுபேரிடம் தங்க நகைகளை இவ்வாறு கொள்ளையடித்து வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் மாத்தளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் சாமரவிக்ரமநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது இவரை எதிர்வரும் 28 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பஸ்களில் இளம் பெண்களுடன் நெருங்கி பழகி தங்க நகைகளை அபகரித்து வந்த நபர் மாத்தளை பொலிஸாரால் கைது. பஸ்களில் இளம் பெண்களுடன் நெருங்கி பழகி  தங்க நகைகளை அபகரித்து வந்த நபர்  மாத்தளை பொலிஸாரால் கைது. Reviewed by Madawala News on October 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.