லங்கா ப்ரீமியர் லீக் போட்டிகளிலிருந்து ஐந்து வெளிநாட்டு வீரர்கள் விலகல்



(அன்சார் எம்.ஷியாம்)
நவம்பர் மாதம் 21 ம் திகதி முதல் டிசம்பர் 13 வரை நடைபெறத்
 திட்டமிடப் பட்டுள்ள லங்கா ப்ரீமியர் போட்டிகளிலிருந்து ஐந்து வெளிநாட்டு வீரர்கள் நீங்கிக் கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்காவுக்கிடையில் நவம்பர் 27 முதல் நடடை பெறவுள்ள மட்டுப்படுத்தப் பட்ட போட்டிகளில் விளையாட உள்ளதன் காரணமாக மில்லர்,
டு ப்ளசிஸ்
மற்றும் டேவிட் மிலன் 
ஆகியோர் L.P.L. போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் 

அன்ட்ரூ ரஸல் உபாதை காரணமாக போட்டிகளில் இருந்து நீங்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. 

மான்விண்டர் பிஸ்லா போட்டிகளில் இருந்து நீங்கிக் கொண்டமைக்கான காரணங்கள் எதுவும் முன்வைக்கப் படவில்லை.

குறித்த வீரர்களின் தெரிவு நடைபெற்று ஒரு வாரம் கூட நிறைவுறாத நிலையில் மேற்படி முடிவு மேற்கொள்ளப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
லங்கா ப்ரீமியர் லீக் போட்டிகளிலிருந்து ஐந்து வெளிநாட்டு வீரர்கள் விலகல் லங்கா ப்ரீமியர் லீக் போட்டிகளிலிருந்து ஐந்து வெளிநாட்டு வீரர்கள் விலகல் Reviewed by Madawala News on October 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.