முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீனை கைது செய்வதை தடுக்கும் வகையில், கட்டளையை பிறப்பிக்க வேண்டாமென மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் அதிபருக்கு கட்டளையிடுமாறும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் சார்பில், அவருடைய சட்டத்தரணியே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவை இன்று (16) தாக்கல் செய்துள்ளனர்.
ரியாஜ் பதியூதீனை கைது செய்வதை தடுக்கும் வகையில், கட்டளையை பிறப்பிக்க வேண்டாம்.
Reviewed by Madawala News
on
October 16, 2020
Rating: