மைக் பொம்பியோ விஜயத்தை முன்னிட்டு சீனா வெளியிட்ட காட்டமான அறிக்கையின் விபரம்.

 Young peace Journalist : Silmiya Yousuf

இலங்கைக்குத் தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டுவர வேண்டாம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத்தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று  இலங்கைக்கு அமெரிக்கா செயலாளர் வருகை தரவுள்ளமையையிட்டு இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.



செவ்வாய்க்கிழமை மாலை இவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதனைமுன்னிட்டு 

முன் ஆயத்தங்களுக்காக ஒரு விஷேட குழு ஒன்று பிரத்தியேகமான குழு ஒன்று அமெரிக்காகவில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் வந்தடைந்துள்ளனர்.


நாளை புதன் கிழமை ஜனாதிபதியையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.


அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்....

அமெரிக்க முதன்மை பிரதி உதவி இராஜாங்க செயலர் டீன் தொம்ஸன்  இராஜாங்க செயலாளரின் எதிர்வரும் விஜயம் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சீனா-இலங்கை உறவு தொடர்பாக பகிரங்கமாக வலியுறுத்தல் விடுத்ததுடன் தலையீடு செய்தமை மட்டுமன்றி வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக 'கடினமானதும் ஆனால் தேவையானதுமான தீர்மானங்களை' இலங்கை மேற்கொள்ள வேண்டும் என கோரியிருந்தமையானது இராஜதந்திர நெறிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.  


 அடுத்த நாள், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கடுமையாக பதிலளித்தார். அமெரிக்க அதிகாரியின் கருத்துக்கள் பனிப்போர் மனநிலையால் நிரம்பியுள்ளன, மேலாதிக்க மனப்பான்மை தோல்வியடையும், இது மற்ற நாடுகளில் தன்னிச்சையாக தலையிடும் அமெரிக்க நடைமுறையை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது, உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நாடுகள் யாருக்கு ஆதரவு என்பதைத் தேர்வு செய்ய கட்டாயப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.


உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக விசாரணைகளில், தூதரகம் மேலும் பின்வருமாறு கூறுகிறது: 


1). சீனா மற்றும் இலங்கை மக்கள் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக நட்பு பரிமாற்றங்களின் வரலாற்றைக் கொண்டுள்ளனர். எங்களின் உறவுகளைக் கையாள எங்களுக்கு போதுமான ஞானம் உள்ளது. ஆணையிட மூன்றாம் தரப்பு தேவையில்லை. 1950 களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு முன்பே, நாங்கள் அமெரிக்க முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளை மீறி, வரலாற்று ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இன்று 21ஆம் நூற்றாண்டில், எந்தவொரு வெளி சக்திகளின் வற்புறுத்தலுக்கும் இரு நாடுகளும் அடிபணிவது என்பது சாத்தியமில்லை. இலங்கை மக்களின் நேர்மையான நண்பராக, இலங்கை மற்ற நாடுகளுடன் ஆரோக்கியமான உறவை வளர்ப்பதைக் கண்டு சீனா மகிழ்ச்சியடைகிறது. எவ்வாறாயினும், அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் வருகையைப் பயன்படுத்தி சீனா-இலங்கை உறவுகளில் தலையிடுவதற்கும், இலங்கையை வற்புறுத்தி ஒடுக்குவதற்கும் நாங்கள் உறுதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். சர்வதேச சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும். சீனா-இலங்கை உறவுகளிலுள்ள பொது ஆதரவை எதிர்கொள்ள நேரிடும். இலங்கை மக்களின் உண்மையான தேவைகளை எதிர்கொள்ள நேரிடும். 'கடினமான ஆனால் தேவையான முடிவுகளை எடுக்க நேரிடும்' என்று நம்பப்படுகிறது. தவிரவும், பிற நாடுகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களில் தன்னிச்சையாக தலையிடும் அசிங்கமான நடைமுறைகளைச் சரிசெய்ய வேண்டும்.


 


02). அதே நேரத்தில், உண்மையான நண்பர்கள் தங்களை மறு பக்கத்திலுள்ளவர்களின் நிலை நின்று நோக்க வேண்டும் என அமெரிக்காவிற்கு உண்மையாக அறிவுறுத்துகிறோம். தற்போது, கோவிட் -19 பரவல் தொடங்கியதிலிருந்து இலங்கை மிகக் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளது. மேலும் உள்ளூர் சுகாதார அமைப்பினால் பிற நாடுகளிலிருந்து வரும் எந்த ஆபத்துகளையும் தாங்க முடியாது. அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 88 லட்சமாகும், இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில், அமெரிக்கா ஒரு பெரிய தூதுக்குழுவையும் முன்னேற்பாட்டுக் குழுவையும் இலங்கைக்கு அனுப்பியது. மேலும் வருகைக்காக, சாலை கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் விடுத்துள்ளது. இந்த அணுகுமுறை, நாடு மீதான உங்கள் மரியாதையை உண்மையிலேயே நிரூபிக்கிறதா? உள்ளூர் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு இது உதவுமா? இது இலங்கை மக்களின் நலன்களுக்காகவா? என்ற கேள்விகளை பொது மக்கள் எழுப்புக்கிறார்கள்.


 


03). சமீபத்தில், ஒரு உயர்மட்ட சீனக் குழுவும் இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கையின் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் மற்றும் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்குத் தேவையான உதவிகளையும் ஆதரவையும் கொண்டு வந்தது. மேலும், தொற்றுநோய் ஏற்கனவே சீனாவில் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அபாயங்களைக் குறைப்பதற்கும், புரவலன் நாட்டை மதிப்பதற்கும், சீனக் குழு அதன் செயல்பாடுகளையும் பணியாளர்களையும் முடிந்தவரை குறைத்தது. இலங்கையின் தொற்றுநோய் தடுப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தது. புரவலன் நாட்டிற்கு ஏதேனும் சிக்கல் வருவதைத் உறுதியாகத் தவிர்த்திருந்தோம். இந்த நடைமுறைகளை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். வெளியுறவு அமைச்சரின் வருகைக்காகவும் சிறிய மற்றும் நடுத்தர நாடுகளுடனான உறவுகளை அமெரிக்கா கையாளுவதற்காகவும் சில குறிப்புகளை வழங்குவோம் என்று நம்புகிறோம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மைக் பொம்பியோ விஜயத்தை முன்னிட்டு சீனா வெளியிட்ட காட்டமான அறிக்கையின் விபரம். மைக் பொம்பியோ விஜயத்தை முன்னிட்டு சீனா வெளியிட்ட  காட்டமான அறிக்கையின் விபரம். Reviewed by Madawala News on October 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.