ரிஷாத் பதியுதீனுக்கு தமது சொகுசு வீட்டில் அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் தெகிவளை தம்பதியினர் கைது.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் தெகிவளை
எபினேசர் பிளேஸில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், ஒரு மருத்துவர் மற்றும் அவரது மனைவி ஆவர்.,
இவர்கள் முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி. ரிசாத் பதியுதீன் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
ரிஷாத் பதியுதீனுக்கு தமது சொகுசு வீட்டில் அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் தெகிவளை தம்பதியினர் கைது.
Reviewed by Madawala News
on
October 19, 2020
Rating: