சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளைச்
சந்தித்து வருவதால், அவ்வணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக கடும் விமர்சனங்களும், மகளுக்கு பாலியல் மிரட்டல் போன்ற எச்சரிக்கைகள் தொடர்ந்ததால், ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு போலிஸ் காவல் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஞ்சி காவல் துறை உயர் அதிகாரி நவ்ஷத் அலம் கூறுகையில். தோனிக்கு சமூக வலைத்தளங்களில் தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதால், ஹர்மு பகுதியில் உள்ள தோனியின் பழைய வீடு மற்றும் சிமலியவில் உள்ள பண்ணை வீடு போன்ற இடங்களில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். “மொத்தம் 10 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுழற்ச்சி முறையில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள்” எனக் கூறினார்
தோனி வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் காவல்.
Reviewed by Madawala News
on
October 11, 2020
Rating: