கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு 178 பில்லியன் நிதி உதவி மத்திய வங்கியால் ஒதுக்கப் பட்டது.
நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட 61,907 வியாபாரங்களுக்கு கடனுதவிகளை வழங்குவதற்காக 178 பில்லியன் ரூபா நிதி மத்திய வங்கியினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 15 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கிடைக்கப்பெற்ற கடன் விண்ணப்பங்களில் 61,907 கடன் கோரிக்கைகளுக்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்குரிய வியாபாரங்களுக்குக் கடன் வழங்குவதற்காக மொத்தமாக 177,954 மில்லியன் ரூபா (சுமார் 178 பில்லியன் ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு 178 பில்லியன் நிதி உதவி மத்திய வங்கியால் ஒதுக்கப் பட்டது.
Reviewed by Madawala News
on
October 17, 2020
Rating: