இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மாடு அறுப்புக்கு தடை வரும் என்பதை 1400 வருடங்களுக்கு முன்பே முஹம்மது நபியவர்கள் சைக்கிணை மூலம் காட்டியுள்ளார்கள்.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மாடு அறுப்புக்கு தடை
வரும் என்பதை 1400 வருடங்களுக்கு முன்பே முஹம்மது நபியவர்கள் சைக்கிணை மூலம் காட்டியுள்ளார்கள்.
இறைவனும் நபி முஹம்மதும் மாடு சாப்பிடுவதை அனுமதித்துள்ளனர். அனுமதி இருந்தும் நபியவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடவில்லை.
1400 வருடங்களுக்கு பின் இப்போது இந்தியா, இலங்கையில் மாட்டிறைச்சிக்கான தடை வரும் போது நபியவர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்டிருந்தால் நபியவர்கள் உண்ட மாட்டிறைச்சியை எம்மால் சாப்பிட முடியாமல் போய்விட்டதே இந்த நாடுகளின் முஸ்லிம்கள் கவலையும், கைசேதமும் அடைவார்கள் என்பதால்த்தான் மாட்டிறைச்சியை விரும்பாதவர்களாக இறைவன் முஹம்மது நபியை ஆக்கினான். இதன் மூலம் மாடு அறுக்க தடை வந்தாலும் நபியுள்ளாஹ் விரும்பாத ஒன்று என இந்த நாட்டு முஸ்லிம்கள் தம் மனதை தேற்றிக்கொள்கின்றனர்.
மாட்டிறைச்சியை முஹம்மது நபி (சல்) மற்றவர்களுக்கு அனுமதித்து இலங்கை, இந்திய முஸ்லிம்களுக்காக தாமும் சாப்பிடாமல் இருந்ததன் காலம் இஸ்லாம் நிச்சயம் கடவுளின் மதம் என்பது நூறு வீதம் உறுதியாகிறது.
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மாடு அறுப்புக்கு தடை வரும் என்பதை 1400 வருடங்களுக்கு முன்பே முஹம்மது நபியவர்கள் சைக்கிணை மூலம் காட்டியுள்ளார்கள்.
Reviewed by Madawala News
on
October 11, 2020
Rating: