அனைத்து பிரதான வீதிகளின் இருமருங்குகளிலும் நடைபாதைகளில் வாகனங்களை
நிறுத்திவைப்பதை முழுமையாக தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்று (15) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளார்.
கிராமிய வீதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலான இராஜாங்க அமைச்சின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அனைத்து பிரதான வீதிகளின் இருமருங்குகளிலும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்திவைப்பதை முழுமையாக தடை.
Reviewed by Madawala News
on
September 16, 2020
Rating: