உடனடியாக அமுலாகும் வகையில் இலங்கையில் மாடு அறுப்பதை தடை
செய்யவும் அது தொடர்பில் ஆராய்ந்து சட்ட ஏற்பாடுகளை செய்யவும் அமைச்சரவை நேற்று அனுமதி அளித்திருக்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவையில் இதற்கான யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.
இந்த விடயத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த தடை உடன் அமுலுக்கு வந்தால் இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் இறக்குமதி செய்ய கால அவகாசம் வழங்கிவிட்டு பின்னர் தடையை கொண்டுவர ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழன்.lk
மாடறுப்பு தடைக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி !
Reviewed by Madawala News
on
September 11, 2020
Rating: