நாவிதன்வெளி - சம்மாந்துறை பகுதிகளில் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி ஆரம்பம்.


-பாறுக் ஷிஹான்-
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்
விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான 5 மாத கால தலைமைத்துவ பயிற்சி இன்று (14) நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் ஆலோசனைக்கமைய  நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா வழிகாட்டலில்   ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பயிற்சி நெறியானது  அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி  பிரதேச எல்லைக்குட்பட்ட பட்டதாரி நியமனம் பெற்ற பட்டாதாரிகளை உள்ளடக்கியதாக பொதுத்துறை, முகாமைத்துவத்துறை, தனியார் துறை மற்றும் திட்ட வேலைகள் துறை ஆகிய துறைகளில், சகல பட்டதாரி பயிலுனர்களுக்கும் மூன்று வார கால பயிற்சிகள் 05 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் வழங்கப்படவுள்ளதாக  நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர்  தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

அதற்கமைய முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பட்டதாரி பயிலுனர்களுக்கு அம்பாறை கொண்டவட்டுவான் இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும், ஆண் பட்டதாரி பயிலுனர்களுக்கு மின்னேரியா இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் மூன்றாவது தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களிலும் நான்காவதாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்திலும் ஐந்தாவதாக தெரிவு செய்யப்பட பட்டதாரி பயிலுனர்களுக்கு நாவிதன்வெளி    பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலைய  மண்டபத்திலும் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இப் பயிற்சி நெறியில் அரச ஊழியர்கள் பழகிக்கொள்ளவேண்டிய பழக்கவழக்கங்கள், இலங்கை அரச ஊழியர்கள் பற்றிய விபரம், நேர முகாமைத்துவம் ,போன்ற பல விரிவுரைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 இந்நிகழ்வில்     நாவிதன்வெளி  பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன்,  நாவிதன்வெளி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித்  ,அண்ணமலை இராணுவ முகாம் லெப்டினண்ட் ஹனீஸ்க சந்திர சிறி   உட்பட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள்   என பலர் கலந்து கொண்டனர் .

ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதல் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் இராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 இராணுவ நிலையங்களில் இன்று (14)(திங்கட்கிழமை) ஆரம்பமாகியது.

நாடு பூராகவும் உள்ள 51 இராணுவ மத்திய முகாம்களில் இந்த வேலைத்திட்டம் ஒரு மாத காலம் இடம்பெறுவதுடன்  ஒரு கட்டத்தின் கீழ் 10 ஆயிரம் பேர் என்ற அடிப்படையில் 5 கட்டங்களில் பட்டதாரிகள் இந்தப் பயிற்சி நெறிக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.இப் பயிற்சயில் தலைமைத்துவம், முகாமைத்துவம், வினைத்திறனாக செயற்படும் முறை உள்ளிட்ட விடயங்கள் பட்டதாரிகளுக்கு விளக்கமளிக்கப்பபடவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒவ்வொரு கட்டமும் 10,000 பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து, அரச துறையின் முழு திறனை ஒரே நேரத்தில் அடைவதற்கு ´தலைமைத்துவம் மற்றும் குழு செயற்பாட்டு பயிற்சி, முகாமைத்துவ பயிற்சி , தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவன பயிற்சி, திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகள் போன்ற பாடங்களை உள்ளடக்கியது. ´ஒத்திசைவு மற்றும் நெகிழ்வுத் தன்மை திறமையான பொதுத்துறை ஊழியரை வளர்ப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

அதேவேளை மோசமான உற்பத்தித்திறனைக் குறைக்கும். இந்த பயிற்சியில் நிர்வாக திறன்கள், அரசாங்க பொறிமுறையின் குறிக்கோள்கள், அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை, புதுமை, நெகிழ்வுத்தன்மை, காட்சிப்படுத்தல், சமூகத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் பற்றிய அறிவை பெற்றுக்கொள்ள முடியும்.

மாவட்டங்களின் படி பங்கேற்கும் பட்டதாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர். பங்கேற்பாளர்களுக்கு திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்படுவதன் ஊடாக அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

ஆட்சேர்ப்பு முதல் ஓய்வு பெறும் வரை அரசத்துறை ஊழியர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முக்கியமான தேவையை மையமாகக் கொண்டு இராணுவப் பயிற்சியின் ஊடாக நீண்ட கால மற்றும் குறுங்கால இலக்குகளில் திறம்பட மற்றும் விளைத்திறனாக பணியாற்றுவதற்கான தலைமைத்துவம், நிர்வாக திறன், இலக்கு மீதான கவனம், தன்நம்பிக்கை மற்றும் அரச பொறி முறையின் நோக்கங்களை புரிதல் என்பவற்றை வளர்த்துக் கொள்ள முடியும்.

இந்த குறுகிய கால முயற்சியின் குறிக்கோளானது தலைமைத்துவ திறன்கள் மற்றும் பண்புகள், குழு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் அனைத்து பொதுமக்களுக்கும் உயர்தர பொதுத்துறை சேவையை வழங்கக்கூடிய ஒரு ஆற்றல்மிக்க, இலக்கு சார், ஒழுக்கமான மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதாகும். நீண்டகால நோக்கங்களை 5 ஆண்டுகளுக்குள் அடையக்கூடிய வகையில் பொதுத்துறை ஊழியர் படையை திறமையான வழிமுறைகள், அணுகுமுறைகள் சமூகத்திற்கு உழைக்கும் கலாச்சார வளர்ச்சி, பொதுத்துறை சேவை அங்கிகாரம், மதிப்பு ,அடையாளம் செயல்பாட்டு அம்சங்களை மதிப்பீடு செய்தல் எனும் பகுதிகளில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

அதன்படி இராணுவப் பயிற்சித் திட்டம் விரிவுரைகள், கலந்துரையாடல்கள், வெளிக்கள பயிற்சி நடவடிக்கைகள், குழு கட்டமைத்தல் நடவடிக்கைகள், ஆய்வு சுற்றுப்பயணங்கள், திறன் ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் ஐந்து சுயாதீனமான ஒன்றோடொன்று தொடர்புடைய தொகுதிகளின் கீழ் தொடங்கப்படும், இது பொதுத்துறையின் பங்களிப்பை ஆற்றல்மிக்கதாக மாற்றும் வழி. இராணுவ பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரச மற்றும் தனியார் துறைகள் மற்றும் சில அரச நிறுவனங்கள் இத் திட்டத்திற்கா செயல்படவுள்ளன.

இந்த 5 மாத முழுவதும் பட்டதாரி பயிற்சி திட்டத்தின் மூலோபாய கருத்துருவாக்கத்தினை ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் வழிகாட்டல்களில் இராணுவத் தலைமையக பயிற்சி பணிப்பகம் முன்னெடுக்கின்றது.

சம்மாந்துறையில் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி
ஐ.எல்.எம் நாஸிம்   
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட  நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான 5 மாத கால  தலைமைத்துவ பயிற்சி இன்று  (14) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனீபா தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இப் பயிற்சி நெறியானது சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பட்டதாரி நியமனம் பெற்ற பட்டாதாரிகளுக்கு 
பொதுத்துறை, முகாமைத்துவத்துறை, தனியார்துறை மற்றும் திட்ட வேலைகள் துறை ஆகிய துறைகளில்,  சகல பட்டதாரி பயிலுனர்களுக்கும் மூன்று வார கால பயிற்சிகள் 05 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில்  வழங்கப்படுள்ளதாக  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனீபா தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதற்கமைய முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பட்டதாரி பயிலுனர்களுக்கு அம்பாறை கொண்டவட்டுவான் இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும், ஆண் பட்டதாரி பயிலுனர்களுக்கு மின்னேரியா இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி   பயிலுனர்களுக்கு   தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும்   மூன்றாவது தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி   பயிலுனர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களிலும்  நான்காவதாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி  பயிலுனர்களுக்கு   சம்மாந்துறை பிரதேச செயலகத்திலும்  ஐந்தாவதாக தெரிவு செய்யப்பட பட்டதாரி  பயிலுனர்களுக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்திலும் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இப் பயிற்சி நெறியில் அரச ஊழியர்கள் பழகிக்கொள்ளவேண்டிய பழக்க வழக்கங்கள்,இலங்கை அரச ஊழியர்கள் பற்றிய விபரம், நேரமுகாமைத்துவம் ,போன்ற பல விரிவுரைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாவிதன்வெளி - சம்மாந்துறை பகுதிகளில் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி ஆரம்பம். நாவிதன்வெளி - சம்மாந்துறை பகுதிகளில் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி ஆரம்பம். Reviewed by Madawala News on September 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.