மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்
மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்வதுடன் மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டிற்கு மேலாக குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும் மணத்தியாலத்திற்கு 50_60 km வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்துவீசக்கூடும்.
கடல் பிராந்தியங்களில்
வங்காள விரிகுடா வின் வடகிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது.
வங்காள விரிகுடா வின் மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு கடல் பகுதிகளில் அடுத்து வரும் சில தினங்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
ஆகையினால் நாளைவரையில் வங்காள விரிகுடா வின் ஆழ்கடல் பிரதேசங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை, புத்தளம் ஊடாக கொழும்பு வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60_70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்துவீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
இதேவேளை நாட்டை சூழ உள்ள ஏனைகடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப் பான நிலையில் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரி
தேசமானிய
மொஹமட் சாலிஹீன்.
இன்றைய வானிலை அறிக்கை.
Reviewed by Madawala News
on
September 21, 2020
Rating: