வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறு செய்ய மாட்டோம்.


(அன்சார்.எம்.ஷியாம்)
முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இணைவது பற்றி இரு வேறுபட்ட

கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவருவது தொடர்பாக ஊடகவிலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்  பதில் அளிக்கையில்- தான் கட்சியின் தலைவர் என்ற வகையில் இதுவரை அவ்வாறான எந்தவொரு தீர்மானத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வரவில்லை என்றும் அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்போரிடமே அதற்கான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் படியும் ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார்.  


நேற்று மடவளையில் நிகழ்ந்த ஒரு நூல் வெளியீட்டுக்கு வந்த வேளை,  தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறு செய்ய மாட்டோம் என்று அடித்துச் சொல்லியதைத் தொடர்ந்தே இக்கேள்வி குறித்த ஊடகவியலாளரால் எழுப்பப் பட்டது.


குறித்த ஒரு மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அடிக்கடி அரசுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் துதி பாடும் கதைகள் ஊடகங்களிலும் சமூக வலைதளத்திலும் உலா வருவது யாரும் அறிந்ததே.
வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறு செய்ய மாட்டோம். வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறு செய்ய மாட்டோம். Reviewed by Madawala News on September 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.