மான், மயிலை அனுமதியின்றி வளர்த்து வந்த நபர் ஒருவரை திம்புள்ள -
பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேசிய புலனாய்வு அதிகாரிகளால் வழங்கப்பட்டத் தகவலுக்கமைய திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை வூட்டன் பகுதியிலுள்ள பண்ணையொன்றிலிருந்தே மான், மயில் ஆகியவற்றைப் வனஜீவராசிகள் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக நல்லத்தண்ணி வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பபட்ட மான், மயிலை வனவிலங்கு சரணாலயத்துக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மான் மற்றும் மயிலை வளர்த்து வந்த நபர் பொலிசாரால் கைது.
Reviewed by Madawala News
on
September 26, 2020
Rating: