மடவளையில் விமர்சையாக இடம்பெற்ற ஜே.எம். சித்தீக் எழுதிய " தப்புக்கணக்கு " சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா.
(சாரிக் அமீன் )
மடவளை பஸார் வை. எம்.எம்.ஏ ஏற்பாட்டில் சமூக சேவையாளர் .ஜே.எம். சித்தீக் எழுதிய " தப்புக்கணக்கு
" சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா நேற்று (26) காலை மடவளை பஸார் தேசிய கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கிய பேரவையின் செயலாளர் எம்.எம்.பீர்முஹம்மது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீல மு.கா தேசிய தலவரும் முன்னால் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எம்.பிக்கு ஜே எம் சித்தீக் தாம் எழுதிய புத்தகத்தை வழங்கிவைப்பதையும்.
மேலும் இந்நிகழ்வில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடத்தில் சுமார் 25 வருடத்த்கிற்கும் மேலாக பணிபுரிந்து இளைப்பாரிய மடவளை எஸ்.எம் நிலாம் என்பவருக்கு அவரின் சேவையை பராட்டி முன்னால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்பவரினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
மேலும் இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக் கழக மொழித்துறை பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் , மடவளை ஜாமியுல் கைராத் ஜும்மா பள்ளிவாயல் நிருவாக சபை உப தலைவர் ஹில்மி அன்சார் நாவலப்பிட்டி கதிரேசன் கோவில் அறங்காவருமான சமூக சமய பேச்சாளர் எம்,ஸ்ரீகாந்தன் , கலாநிதி பவுஸீல் ரஸீன் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ வினது தேசிய தலைவர் சஹீத் எம் ரிஸ்மி , வர்த்தக மற்றும் தொழிற்துறை வாரியத்தின் பணிப்பாளர் பவுஸ் ஏ,காத,ர் ,, பிரதேச சபை உறுப்பினர்களான எம்..எம். ரியாஜ் , அஷ்ரப் அபுபக்கர் , கவிஞர் ஜெசிமா ஹமீட்,
கவிஞர் அன்சார் எம். ஷியாம் ,
இரா ஏ .இராமன் உள்ளிடட பலர் கலந்துகொண்டனர்.
மடவளையில் விமர்சையாக இடம்பெற்ற ஜே.எம். சித்தீக் எழுதிய " தப்புக்கணக்கு " சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா.
Reviewed by Madawala News
on
September 27, 2020
Rating: