இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞன் பலி, மூவர் காயம். #ஏறாவூர் பொலிஸ் பிரிவு



(சுஆத் அப்துல்லாஹ்)
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில்

ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தாண்டி - மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தே இவ் விபத்துச் சம்பவம் இன்று (21) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலியானவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் பலியானவர் சித்தாண்டியைச் சேர்ந்த பீ.சதீஸ்குமார் எனும் 21 வயதுடைய இளைஞன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞன் பலி, மூவர் காயம். #ஏறாவூர் பொலிஸ் பிரிவு இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞன் பலி, மூவர் காயம். #ஏறாவூர் பொலிஸ் பிரிவு Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.