மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம், 9ஆவது தடவையாக உலக முதியோர் தினத்தை, ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப.9.00 மணிக்கு, மடவளை மதீனா தேசிய பாடசாலையின், அஷ்ர்ஃப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடத்தவுள்ளது.
இவ்வைபவத்திற்குப் பிரதம அதிதியாக எமது ஊரின் முதல் கலாநிதியும்’, கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான Dr. A.H.M. மௌஜூத் அவர்களும், கௌரவ அதிதியாக அல்ஹாஜ். M.S.M. ரிஸ்மி (தேசியத் தலைவர்- அகில இலங்கை YMMA பேரவை) அவர்களும், விஷேட அதிதியாக தேசகீர்த்தி அல்ஹாஜ். ஃபௌஸ் A காதர் (விக்டோரியா மார்கெடிங் உரிமையாளைர்) அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
அன்றைய தினத்தில்
# 2019ஆம் ஆண்டில், ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற
16 மாணவர்கட்கும், 150க்கு மேல் புள்ளிகள் பெற்ற 8 மாணவர்கட்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கிப் பாராட்டப்படவுள்ளனர்.
# 2019ஆம் ஆண்டு GCE O/L பரீட்சையில் ஆங்கிள பாடத்தில் A சித்தி பெற்று,உயர்தரத்திற்கு தகுதி பெற்ற 15 மாணவர்களுக்கு, ஜலீல் டீச்சரின்
நினைவுப்பரிசும் வழங்கப்பட உள்ளது..
# தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஷேட பரிசுகள்
வழங்கப்பட உள்ளன.
# தேர்ந்தெடுக்கப்பட்ட 25 முதியோர்கட்கு, ரூபா:2000/= பெறுமதியான போஷாக்கு உணவுப்பொதியும் வழங்கப்பட உள்ளது.
# நீண்டகாலம் ஆசிரியர்களாக சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ள ஆசிரியரான அல்ஹாஜ்.(மௌலவி) M.A.M. இஸ்மாயில் அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளார்.
எனவே இவ்வைபவத்திற்குக் குறிப்பாக, எமது சங்கத்தின் சகல அங்கத்தவர்களையும், அங்கத்தவராவதற்கு தகுதி பெற்றவர்களையும், மடவளையிலுள்ள சகல சங்கங்கள், நிறுவனங்களின் நிருவாகக்குழு உறுப்பினர்களையும், 2019 ஆம் ஆண்டில் புலமைப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் பெற்றோர்களையும், 2019ல் தரம் நான்கில் கல்வி கற்கும் சகல மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும், ,எமது சங்கத்திற்கு நிதியுதவிய சகல அன்பளிப்பாளர்களையும், ஆதரவாளர்களையும், பொதுவாக சகல மடவளை வாசிகளையும் அன்பாய் அழைக்கின்றோம்.
தகவல்:A.L.A.ஜலீல்-
செயலாளர்,
மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம்.
மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 9ஆவது உலக முதியோர் தினம் - 2020.
Reviewed by Madawala News
on
September 28, 2020
Rating: