மன்னார் கொண்டச்சி பிரதேசத்தில் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய மஞ்சள் தொகையுடன்
நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் சந்தேகத்தின் பேரில் நபரொருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த மஞ்சள் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக இராணுவ ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது 3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 946 கிலோ கிராம் மஞ்சள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது
30 இலட்சம் பெறுமதியான மஞ்சளுடன் நபரொருவர் கைது
Reviewed by Madawala News
on
September 29, 2020
Rating: