3 பேருடன் 30 அடி பள்ளத்திலிருந்த வீட்டின் கூரை மீது வீழ்ந்த முச்சக்கரவண்டி.
தலவாக்கலை குணாநந்தபுர பகுதியிலுள்ள வீடொன்றின் கூரையின் மீது முச்சக்கர வண்டியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் லிந்துல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக் கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து கடந்த ஞாயிறு மாலை இடம்பெற்றுள்ளது.
ஹற்றன் வட்டவளை பகுதியிலி ருந்து தலவாக்கலை குணாநந்த பகுதிக்கு வந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு வீதியை விட்டு விலகி பின்னோக்கிச் சென்று குடைசாய்ந்து 30 அடி பள்ளத்திலிருந்த வீட்டின் கூரை மீது வீழ்ந்து விபத்துக்குள்ளா கியுள்ளது.
இதை செலுத்திய சாரதி மற்றும் இதில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் லிந்துல வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
3 பேருடன் 30 அடி பள்ளத்திலிருந்த வீட்டின் கூரை மீது வீழ்ந்த முச்சக்கரவண்டி.
Reviewed by Madawala News
on
September 15, 2020
Rating: