இந்தியாவில் இருந்து வந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தவர் உயிரிழப்பு.


இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஈழ
அகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிருஷ்ணன் என்பவரே உயிரிழந்தார்.

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக வட கடல் பகுதிக்குள் வந்த ஈழ அகதிகள் 4 பேர் யாழ் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அவர்களில் ஒருவருக்கு நோய் வாய்ப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (11) காலை அனுமதிக்கப்பட்டார்.
இந்தியாவில் இருந்து வந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தவர் உயிரிழப்பு. இந்தியாவில் இருந்து வந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.