ஹொங் கொங்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்றத்
தேர்தல்கள் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொரோன வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இத்தேர்தல்களை ஒத்திவைப்பது அவசியம் என ஹொங் கொங் அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
சீனாவின் விசேட நிர்வாகப் பிரிவான ஹொங் கொங்கில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மேலும் 121 பேருக்கு இவ்வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்கு கொரோனா பரவலை ஹொங் கொங் அரசாங்கம் பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஹாங்காங் தேர்தல்கள் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.
Reviewed by Madawala News
on
August 01, 2020
Rating: