மதுபோதையில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவர், உடன்
அமுலுக்கு வரும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாக்கு எண்ணும் மத்திய நிலையமாகப் பெயரிடப்பட்டுள்ள வெயாங்கொட- பத்தலகெதர தேசிய கல்வியத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரியொருவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட, வெயாங்கொட பொலிஸ் நிலைய பரிசோதகர் ஒருவரே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரென, கம்பஹா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பொலிஸ் பரிசோதகர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, வைத்திய பரிசோதனை செய்தபோது, அவர் மதுபோதையில் இருந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்தே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடி பணி நீக்கம்.
Reviewed by Madawala News
on
August 05, 2020
Rating: