அம்பாறை மாவட்டத்தில் ஆளும் தரப்பின் இனவாதமும், கருணாவின் இனவாதமும், ஞானசாரவின் இனவாதமும் தலைவிரித்தாடுகின்றன



அம்பாறை மாவட்டத்தில் ஆளும் தரப்பின் இனவாதமும், கருணாவின் இனவாதமும், ஞானசாரவின் இனவாதமும் தலைவிரித்தாடுகின்றன என முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எம்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டார்.


கருணாவின் இனவாதக் கோரமுகம் அம்பாறையில் தலைகாட்டியுள்ளது. இது கல்முனைக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் மிகவும் ஆபத்தானது. தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு அவர் முயற்சித்து வருகின்றார். 


பெரும்பான்மை இனவாதிகளும், கருணா போன்ற இனவாதிகளும், முஸ்லிம்களின் முதுகெலும்பான முஸ்லிம் காங்கிரஸை உடைத்து எறிவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு இடமளிக்க முடியாது என்றார். 


ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் பிரதியமைச்சர் பைசல் காஸிம், அப்துல் வாசித் ஆகியோர் உட்பட பலரும் உரையாற்றினார்கள். 


அம்பாறை மாவட்டத்தில் ஆளும் தரப்பின் இனவாதமும், கருணாவின் இனவாதமும், ஞானசாரவின் இனவாதமும் தலைவிரித்தாடுகின்றன அம்பாறை மாவட்டத்தில் ஆளும் தரப்பின் இனவாதமும், கருணாவின் இனவாதமும், ஞானசாரவின் இனவாதமும் தலைவிரித்தாடுகின்றன Reviewed by Madawala News on August 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.