மக்கள் அரசியல் வாதிகளை தேடிச்சென்று தீர்வு பெறும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் காலடிக்கே வந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
கொழும்பு கொட்டஹேன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
பிரதமராக பதவி வகித்தும், நிதி அமைச்சராக சிலர் பதவி வகித்தும் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கு ஒரு தேசிய பாடசாலையை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.நான் எதிர்வரும் 6 மாதங்களில் 2 தேசிய பாடசாலைகளை கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கு பெற்றுத்தருவேன்.
அன்று டை கோர்ட் அணிந்திருந்த போது மக்களை இவர்களுக்கு கண்ணில் விளங்கவில்லை இப்போது வீதியில் இறங்கி வாக்கு கேட்கிறார்.
மக்கள் அரசியல் வாதிகளை தேடிச்சென்று தீர்வுபெறும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் காலடிக்கே வந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உங்களின் காலடிக்கே வந்து உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் ; சஜித்
Reviewed by Madawala News
on
August 02, 2020
Rating: