ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விவகாரத்தை சுமுகமாக தீர்க்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள
நிலையில் முன்னதாக பெயரிடப்பட்ட 7 பேருக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்படும் என அக்கட்சி முக்கியஸ்தர்கள் மூலம் அறியக்கிடைத்தது.
முன்னதாக இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் , ஹரீன் பெர்னாண்டோ , எரான் விக்ரமரத்தன , மயந்த திஸாநாயக்க , திஸ்ஸ அத்தநாயக , டயனா கமகே, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோருக்கு தேசிய பட்டியல் வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது தேசியப்பட்டியல் விவகாரம் இணக்கப்பட்டிற்கு வந்துள்ள நிலையில் முன்னர் பெயரிடப்பட்ட 7 பேருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என நம்பகமாக அறியவருகிறது.
சில தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள அசாத் சாலிக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கபடும் வாய்ப்பு மிக மிக அறிதாக காணப்படுவதாக கூறப்பட்டது.
தேசியப் பட்டியல் விவகாரம் ; முன்னர் பெயரிடப்பட்ட 7 பேருக்கே வாய்ப்பு !!
Reviewed by Madawala News
on
August 11, 2020
Rating: