நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 03 முஸ்லிம்களை நியமித்து, அந்த சமூகத்தை கௌரவித்துள்ளோமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் குறித்து, பிரதமர் மஹிந்த மற்றும் அவரது சகோதரர்களுடனான சந்திப்பின் போதே பசில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரியும் பங்கேற்றார்.
தேசியப் பட்டியல் மூலமாக 03 முஸ்லிம்களை நியமித்து, அந்த சமூகத்தை கௌரவித்துள்ளோம்
Reviewed by Madawala News
on
August 09, 2020
Rating: