மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC யின் அரசியல் கலாசாரம் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட வேண்டியது.




மாவட்டத்தில் SLMC க்கூடாகவும் ஒரு முஸ்லீம் பிரதிநிதி தெரிவுசெய்யப்பட சந்தர்ப்பம்
இருந்தால் அதனை தடுக்கவும் நாம் தயாரில்லை. ஆனால் தற்போதைய பாராளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC கட்டவிழ்த்து இருக்கின்ற அரசியல் கலாசாரத்தை நினைத்துதான் கவலையாக இருக்கிறது.

1. கல்குடாவை மையமாக கொண்ட பிரதேசவாதம்.

2. பணக்கலாசாரம்.

இவ்வாறு இருக்கும் நிலையில் ஒரு பிரதிநிதி SLMC யிலிருந்து வந்தால் எமது சமூகத்தின் எதிர்காலம் என்னவாக அமையும்? என்ற கேள்வி எமக்கு எழுகிறது.

சிலவேளை கல்குடாவைச் சேர்ந்த SLMC வேட்பாளர் தெரிவாகினால் இந்த மாவட்டத்தை மையப்படுத்திய அரசியல் வேலைத்திட்டம் பிரதேசவாதத்தை அடியொற்றியதாகவே அமையும்.

அல்லது பணத்தினூடாக எதையும் செய்யலாம் என்று எண்ணுகின்ற SLMC வேட்பாளர் தெரிவாகினால் இந்த மாவட்டத்தில் அரசியல் வியாபாரம் வீரியம் கொண்டதாக இருக்கும் அதேவேளை, சுயாதீனமற்ற மக்களாகவும் இந்த மாவட்டதின் முஸ்லீம்கள் வழிநடாத்தவும்படுவார்கள்.

ஆகவே தற்போதைய SLMC யின் அரசியல் கலசாரம் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட வேண்டியதொன்றாகும்

MLM.சுஹைல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC யின் அரசியல் கலாசாரம் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட வேண்டியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC யின் அரசியல் கலாசாரம்  திட்டமிட்டு தோற்கடிக்கப்பட வேண்டியது. Reviewed by Madawala News on July 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.