எப்.முபாரக்
நாட்டில் தனியார் பல்கலைக் கழகத்திற்கு எதிர்த்து தெரிவித்து கந்தளாய் நகரில் கவனயீர்ப்பு
ஆர்ப்பாட்டமொன்று இன்று(31) நடைபெற்றது.
தேசிய பல்கழைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இருபதிற்கும் மேற்பட்ட பல்கழைக் கழக மாணவர்கள் மற்றும் பல்கழைக்கழக பௌத்த தேரர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
நாட்டில் கொரோனா நோயளர்கள் அதிகரிப்பு,
தேர்தலை நிறுத்து,
தனியார் பல்கழைக் கழகத்தினை சட்டமாக்குவதை நிறுத்து,
சுதந்திரமான கல்வியும்,சுகாதாரம்,பெற்றுக்கொடு,
மற்றும் சட்டவிரோத பட்டங்களை தடுத்து நிறுத்து போன்ற சுலோகங்களை ஆர்ப்பாட்ட காரர்கள் ஏந்தியிருந்தார்கள்
தனியார் பல்கலைக் கழகத்திற்கு எதிர்த்து தெரிவித்து கந்தளாய் நகரில் ஆர்பாட்டம்.
Reviewed by Madawala News
on
July 31, 2020
Rating: