பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை.. முச்சக்கரவண்டியுடன் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சஹீத் மௌலவி .
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் செட்டிகுளம் துடரிகுளம் வீதி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முயன்ற போது முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.
இதன்போது முதலியார்குளம் பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 55 வயதுடைய சஹீத் எனும் மௌலவி சம்பவ இடத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் 500 மீற்றர் தூரத்திற்கு முச்சக்கரவண்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சாரதியின் உடல் 150 மீற்றருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .
இதன்போது விபத்தில் உயிரிழந்தவரின் ஜனாஸா செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை.. முச்சக்கரவண்டியுடன் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சஹீத் மௌலவி .
Reviewed by Madawala News
on
July 01, 2020
Rating: